search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன்பிடித்த கலெக்டர்
    X

    கடலில் வலைவீசி மீன் பிடித்த கலெக்டர்.

    மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன்பிடித்த கலெக்டர்

    • கலெக்டர் விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.
    • நடுக்கடலில் படகில் இருந்தவாறு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தின் முதுகெலும்பாக மீன்பிடி தொழில் உள்ளது. இந்த மாவட்ட புதிய கலெக்டராக சமீபத்தில் ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்றார்.

    மீன்பிடி தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் கலெக்டருக்கு இருந்து வந்தது.

    இதனையடுத்து மீனவர்களின் தொழில் முறை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தெரிந்து கொள்ள மீனவர்களுடன் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்.

    அதன்படி, நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.

    நடுக்கடலில் வைத்து சூடம் ஏற்றி வழிபட்ட பின்னர் மீனவர்களை போன்று கடலில் வலைவீசி மீன் பிடித்தார்.

    தொடர்ந்து, அவர் வீசிய வலையில் சிக்கிய மீன்களின் ரகங்கள் என்ன என்பது குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

    அவ்வப்போது விசைப்படகையும் ஓட்டி மகிழ்ந்தார். மேலும், நடுக்கடலில் படகில் இருந்தவாறு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நாகை மாவட்ட கலெக்டர் மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு சென்று மீன்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×