search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
    X

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

    • டீசல் டேங்கில் புகை வந்ததால், டிரைவர் காரை நிறுத்தினார்
    • கோத்தகிரி பகுதியிலும் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது.

    அரவேனு,

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்ற மாருதி கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    .

    கார் தட்டப்பள்ளம் அருகே வந்த போது வாகனத்தின் டீசல் டேங்கில் இருந்து புகை வந்துள்ளது. உடனே காரை டிரைவர் நிறுத்தியுள்ளார். காரில் தீ மளமளவென பரவி தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் காரில் பற்றிய தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

    இதனைபோல, கோத்தகிரி நகர் பகுதியில் டானிங் டன் பகுதியில் சக்தி தியேட்டர் பின்புறம் பாரத் என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து தீயணைப்பு துறையுனர் மின்கசிவு ஏற்பட்ட வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர் .

    இந்த 2 தீ விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×