கோவை அருகே 1½ வயது பெண் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

லூர்துராஜ் குழந்தை தன்விகாவின் மரணத்தில் மனைவி ரஞ்சிதம் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார். சோதனையில் குழந்தையின் உடலில் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் எந்த காயங்களும் இல்லை என்பது தெரிய வந்தது.
கோவை அருகே 1½ வயது பெண் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
Published on

கோவை,

கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள நேதாஜிபுரத்தை சேர்ந்தவர் லூர்துராஜ். இவர் எட்டிமடை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தன்விகா என பெயர் வைத்தனர்.

கடந்த 15-ந் தேதி தன்விகா தனது 1½ வயது குழந்தையுடன் தொண்டாமுத்தூர் களிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

அங்கு இருந்த போது 17-ந் தேதி தன்விகாவிற்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ரஞ்சிதம் தனது குழந்தையை கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு இருந்தபடி அவரது கணவரை தொடர்பு கொண்ட ரஞ்சிதம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும் கூறினார். அன்று இரவு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது.

இதனையடுத்து ரஞ்சிதம் குழந்தையை தாய் முருகம்மாள் மற்றும் அவரது தம்பி ஆகியோருடன் சேர்ந்து குழந்தையின் உடலை கணவர் வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர் குழந்தையின் உடலை கே.ஜி.சாவடி நேதாஜிபுரத்தில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.

இந்தநிலையில் லூர்துராஜ் குழந்தை தன்விகாவின் மரணத்தில் மனைவி ரஞ்சிதம் மீது சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

நேற்று போலீசார் நேதாஜிபுரத்தில் உள்ள மயானத்துக்கு சென்றனர். பின்னர் மதுக்கரை தாசில்தார் ராஜேஸ்குமார் முன்னிலையில் குழந்தையின் உடலை போலீசார் ேதாண்டி எடுத்து டாக்டர்கள் குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் குழந்தையின் உடலில் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் எந்த காயங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சோதனை முடிவில் குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com