search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாராஜகடை வனப்பகுதியில், 7 யானைகள் முகாம்
    X

    மகாராஜகடை வனப்பகுதியில், 7 யானைகள் முகாம்

    • 2 யானைகளும் முகா மிட்டுள்ளதால், வனப்பகு தியை ஒட்டி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
    • வனத்தை யொட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை வனப்பகுதியில், 7 யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜ கடை வனப்பகுதியில், ஆந்திரா மாநில எல்லையில் உள்ள வனப்பதியாகும். இந்த வனப்பகுதியில் ஏற்கனவே 5 யானைகள் முகாமிட்டுள்ளன.

    அந்த யானைகள் அடிக்கடி வனத்தை சுற்றியுள்ள விளை நிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகள் விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன், கர்நாடகா வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் தமிழக எல்லை வனப்பகுதியான, கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்தது.

    இந்த யானைகளை வனத்துறையினர், வேறு வனப்பகுதிக்கு விரட்ட முயன்ற போது, அவை மகாராஜகடை வனப்பகுதிக்கு வந்துவிட்டது. ஏற்கனவே 5 யானைகள் மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், மேலும் 2 யானைகளும் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    இதனிடையே, வனத்தையொட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

    Next Story
    ×