என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
ஒட்டன்சத்திரம் அருகே கடையை உடைத்து பணம் திருடியவருக்கு 6 மாத சிறை
- கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.481ஐ திருடப்பட்டது.
- அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே மார்க்கம்பட்டியில் நாகராஜ் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.481ஐ திருடப்பட்டது. இதுகுறித்து இடையகோட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழனி அருகே உள்ள நெய்காரப்பட்டியை சேர்ந்த சின்னகாளியப்பன்(48) என்பவர் பணம் திருடியது தெரியவந்தது.
அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வழக்குநடந்து வந்தது. இதனைவிசாரித்த நீதிபதி செல்வமகேஸ்வரி பணம் திருடிய சின்னகாளியப்பனுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.200-ம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story






