வாகன நெரிசலை தவிர்க்க ரூ.6 லட்சம் மதிப்பில் சாலை பணிகள்

நகரமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சிக்கு வெற்றி அக்கீம்பாபு, நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்
வாகன நெரிசலை தவிர்க்க ரூ.6 லட்சம் மதிப்பில் சாலை பணிகள்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மேரிஸ்ஹில் பகுதியில் இருந்து ஜெ.எஸ்.எஸ் வரையிலான சாலையில் மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டும் கல்வெட்டு போடாமல் இருந்தது. எனவே அந்த பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் அப்பகுதி நகரமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியால், அங்கு ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய கல்வெட்டு அமைக்கும் பணி துவங்கியது.

இந்த பணிகளை நகரமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க பாசறை மாவட்டசெயலாளருமான அக்கீம்பாபு மற்றும் நகரமன்ற உறுப்பினர் நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com