search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் 400 ஆண்டு பழமையான மருதமரத்திற்கு தீ வைப்பு
    X

    தீப்பிடித்த மரத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர்.

    பெரியகுளத்தில் 400 ஆண்டு பழமையான மருதமரத்திற்கு தீ வைப்பு

    • 400 ஆண்டு பழமையான பாலசுப்பிர மணியன் கோவிலின் பின்புறம் 2 மருதமரங்கள் உள்ளது.
    • இந்நிலையில் மர்மநபர்கள் மரத்தின் வேர்பகுதியில் தீ வைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளத்தில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டு பழமையான பாலசுப்பிர மணியன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் தீர்த்த தொட்டியும், அதன் அருகே 2 மருத மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

    இந்த மரத்தின் பட்டை பல்வேறு நோய்களை தீர்க்கும் குணம் கொண்ட தாகும். இந்நிலையில் மர்மநபர்கள் மரத்தின் வேர்பகுதியில் தீ வைத்து ச்சென்றனர்.

    அடிப்பகுதியில் பற்றிய தீ மளமளவென பரவி மரம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணை த்தனர். இருந்தபோதும் மரத்தின் பெரும்பகுதி எரிந்து சேதமானது.

    இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மரத்திற்கு தீ வைத்த நபர்களை கண்ட றிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×