என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளில் மது விற்பனை 4 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு
    X

    கோப்பு படம்.

    வீடுகளில் மது விற்பனை 4 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அவர்களிடம் இருந்த 90 மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்ப ட்டன
    • பெரியகுளம் பகுதியில் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரை போலீசாருக்கு சிலர் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கீழவடகரை மற்றும் வடகரை பகுதியில் ரோந்து சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்க பாண்டி மற்றும் சுரேஷ் ஆகிய 2 வாலிபர்கள் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களி டம் இருந்த 90 மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்ப ட்டன. இதே போல் பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி மற்றும் டி.கள்ளிபட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அம்ச கொடி மற்றும் யோகேந்திரன் ஆகிய 2 வாலிபர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததற்கு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெரியகுளம் பகுதியில் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×