search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவையிலிருந்து   சாராயம் கடத்திய  3 பேர்  கைது
    X

    புதுவையிலிருந்து சாராயம் கடத்திய 3 பேர் கைது

    • புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் தலைமையில் புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவைப் பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் புதுவையில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையில் கொறத்தி கிராமத்தைச் சேர்ந்தநடராஜன், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் , ஆகியோர் என தெரியவந்தது.இவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 120 பாக்கெட் சாராயங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×