search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயம்
    X
    கோப்புப்படம்.

    தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயம்

    தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் செல்வ நாயகபுரத்தை சேர்ந்த செந்தில் மகள் பிரதீபா (வயது17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளிேய சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் தென்நகர் காலனியை சேர்ந்த செல்வம் மகள் பாவனா (16). பிளஸ்-1 படித்து வருகிறார். செல்வத்திற்கும் அவரது மனைவி காஞ்சனாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் பிரிந்து விட்டனர். செல்வம் மதுரையை சேர்ந்த பிரவீனா என்பவரையும், காஞ்சனா ஊத்துப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.

    பாவனா தனது பாட்டி வீட்டில் வளர்ந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். சம்பவ த்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார் . இது குறித்து அவரது தாத்தா சந்திரன் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    லோயர்கேம்ப் நாரா யணன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி இலக்கியா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரன் தனது மாமியா ருக்கு ரூ.3 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்கு ம்போது ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து குமுளி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×