என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழ்நாட்டில் 2வதாக சென்னை-நெல்லைக்கு 'வந்தே பாரத்' ரெயில்- விரைவில் இயக்க திட்டம்
- தமிழ்நாட்டில் தற்போது சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
- பெட்டி தயாரானதும் விரைவில் நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாட்டில் தற்போது சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்ததாக சென்னை-மதுரை இடையே இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.
தென் மாவட்ட பயணிகள் நலனை கருத்தில் கொண்டு நெல்லை வரை நீட்டிக்க பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், ரெயில்வே பயணிகள் நல வாரிய உறுப்பினர் எம்.கே.ரவிச்சந்திரன் ஆகியோர் ரெயில்வே மந்திரி மற்றும் ரெயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து அடுத்த வந்தே பாரத் ரெயிலை சென்னை முதல் நெல்லை வரை இயக்க திட்டமிட்டுள்ளனர். அதிவிரைவு ரெயில்களின் வேகத்துக்கு இணையாகவே வந்தே பாரத் ரெயிலின் வேகமும் இருப்பதால் ரெயில் பாதை பிரச்சினை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெட்டி தயாரானதும் விரைவில் நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்றனர்.
மேலும் தென்மாவட்ட ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறைக்கப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்