வீடு, குடோனில் பதுக்கிய 2.6 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வீட்டில், 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.அரிசி கடத்தல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
பதுக்கிய ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சி.
பதுக்கிய ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சி.
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் உள்ள சேலம் சாலை சாமுண்டீஸ்வரி திருமண மண்டபம் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுகுமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள தனியார் கட்டட குடோனில் சோதனையிட்டபோது, 50 கிலோ அளவிலான, 42 மூட்டைகளில், 2ஆயிரத்து 100 கிலோ ரேசன் அரிசி பதுக்கியிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

அதேபோல திருவண்ணாமலை சாலை, அரசு நகர்புற சுகாதார நிலையம் அருகில் ஒரு வீட்டில், 50 கிலோ அளவிலான, 10 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் அரிசி கடத்தல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com