search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 வீடுகளில் அதிரடி சோதனை
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 வீடுகளில் அதிரடி சோதனை

    • விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுகிறது.
    • 200 பேரின் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்க ளான கஞ்சா, அபின், பிரவுன்சுகர், குட்கா, கூள்லிப், ஹன்ஸ் போன்றவைகள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் நிலைய எல்லைகளில் 200 பேர் போதை பொருட்களை விற்பனை செய்துவருவதாக கண்டறி யப்பட்டுள்ளது.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 200 பேரின் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×