search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

    • ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகில் உள்ள குமணன்தொழு பகுதியை சேர்ந்த தம்பித்துரை மகன் சுதாகரன் (வயது35). திருமணமாகவில்லை. ஆடு, மாடுகள் மேய்த்து வந்தார். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கொடித்துரை என்பவரது தோட்டத்தில் ஆடுகளுக்கு இலை தளைகள் வெட்டிக்கொண்டிருந்தார்.

    அப்போது உயரே சென்ற மின் அழுத்த கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீசுப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் சமுத்திரம் குழுமணி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவர் கடந்த 10 வருடங்களாக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    நேற்று இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். நீண்ட நேரமாக திரும்பி வராததால் ஊழியர்கள் தேடி பார்த்தபோது டிரான்ஸ்பார்மர் அருகே இறந்து கிடந்தார். இவருக்கு மது குடிக்கம் பழக்கம் இருந்துள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×