என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே கைக்குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயம்
- குடும்ப பிரச்சினை காரணமாக 2 பெண்கள் கைக்குழந்தைகளுடன் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூர் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது29). இவருக்கும் கற்பகம் (25) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகளும், கார்த்திகேயன் என்ற 1½ வயது மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற கற்பகம் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுசி (20). இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.
சம்பத்தன்று சுசி தனது குழந்தையுடன் தேனிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து சுசியின் தாய் லட்சுமி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்