search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே கைக்குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயம்
    X

    கோப்பு படம்

    தேனி அருகே கைக்குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயம்

    • குடும்ப பிரச்சினை காரணமாக 2 பெண்கள் கைக்குழந்தைகளுடன் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூர் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது29). இவருக்கும் கற்பகம் (25) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகளும், கார்த்திகேயன் என்ற 1½ வயது மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற கற்பகம் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுசி (20). இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.

    சம்பத்தன்று சுசி தனது குழந்தையுடன் தேனிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து சுசியின் தாய் லட்சுமி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×