search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே மூதாட்டி உள்பட 2  பெண்கள் மாயம்
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே மூதாட்டி உள்பட 2 பெண்கள் மாயம்

    • அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி காளியம்மாள் (வயது62). இவரது மகன் காமுத்துரை (42). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். காளியம்மாள் தனது சகோதரி பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இது குறித்து தகவல் அறிந்ததும் காமுத்துரை சொந்த ஊர் திரும்பி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி வேல்மணி (53). இவர் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் வேல்மணி மாயமானார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×