search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் பீர் பாட்டிலால் வாலிபர் மண்டையை உடைத்த 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    நிலக்கோட்டையில் பீர் பாட்டிலால் வாலிபர் மண்டையை உடைத்த 2 பேர் கைது

    • மது போதையில் வாலிபரின் தலையில் பீர்பாட்டிலால் அடித்ததால் படுகாயமடைந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி மகன் தினேஷ் (வயது 27). ஜோதிடர். இவரது மைத்துனர் மாரிமுத்து. இவர்கள் 2 பேரும் நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சரவணன் மகன் முத்துமணி (வயது 25), முனியாண்டி மகன் அலெக்ஸ் குமார் (22) ஆகிேயார் மோட்டார் சைக்கிளில் மது போதையில் ஏறி தகராறு செய்தனர். அப்போது அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து முத்துமணி ஆத்திரத்தில் மாரிமுத்து தலையில் அடித்தார். இதில் மாரிமுத்து மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.

    இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடவே முத்துமணி, அலெக்ஸ்குமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இதனைத் தொடர்ந்து மாரிமுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து தினேஷ் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து முத்துமணி, அலெக்ஸ் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×