search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் அரசு பொருட்காட்சியை 2 லட்சம் பேர் பார்வையிட்டனர்
    X

    கோவையில் அரசு பொருட்காட்சியை 2 லட்சம் பேர் பார்வையிட்டனர்

    • இப்பொருட்காட்சியில் 33 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    • ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 160 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

    கோவை,

    கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த மே 13-ந் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி நடந்து வந்தது. இப்பொருட்காட்சியானது தொடர்ந்து நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்றது.

    ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினை அணுகி அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

    இப்பொருட்காட்சியில் 27 அரசு துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அரசு பொருட்காட்சியை காண வந்த பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    நேற்று வரை நடந்த அரசு பொருட்காட்சியை 1 லட்சத்து 77 ஆயிரத்து 742 பெரியவர்களும், 40 ஆயிரத்து 303 சிறியவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 45 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் நுைழவுக்கட்டணமாக ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 160 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×