search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  2 கல்லூரி மாணவிகள் மாயம்:  போலீசார் விசாரணை
    X

    பிரீத்தி.சுபாஷினி.

    பண்ருட்டி அருகே 2 கல்லூரி மாணவிகள் மாயம்: போலீசார் விசாரணை

    • பிரீத்தி (வயது 19) பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • சுபாஷினி(வயது 20). இவர் பிபிஏ 3-ம் ஆண்டு தற்போது நெட்சென்டருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக் குப்பத்தை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகள் பிரீத்தி (வயது 19). மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர், அன்று மாலை வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பிரீத்தியை போனில் தொடர்பு கொண்டனர் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் தோழி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு போன் தொடர்பை துண்டித்து விட்டதாகவும், அவர் பயன்படுத்திய செல்போன் தொடர்ந்து சுட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் பிரீத்தியன் பெற்றோர் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் இவரது மகள் சுபாஷினி (20). இவர் உளுந்தூர்பேட்டை சாரதா குருகுலம் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான பூண்டி வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். கடந்த 8-ந்தேதி காலை 11 மணிக்கு தனது வீட்டில் இருந்து கண்டரக்கோட்டை நெட்சென்டருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.


    Next Story
    ×