சமயபுரம் கோவில் தெப்பக்குளத்தில் மிதந்த 2 ஆண் பிணங்கள்-போலீசார் விசாரணை

தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமயபுரம் கோவில் தெப்பக்குளத்தில் மிதந்த 2 ஆண் பிணங்கள்-போலீசார் விசாரணை
Published on

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இதனால் சமயபுரம் கோவில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

இந்த கோவிலுக்கு உரிய தெப்பக்குளம், கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த தெப்ப குளத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசிப்பார்கள்.

இந்த தெப்ப குளத்தில்தான் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு சென்ற போலீசார் காக்கி சட்டை, பனியன் அணிந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு விசாரணையை தொடங்கிய போலீசார், தெப்பகுளத்தை சுற்றி சோதனை மே ற்கொண்டனர். அப்போது அங்கு உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் மேலும் ஒரு ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சடலத்தையும் மீட்டனர். இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்கள் யார்? இது விபத்தா? தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து சமயபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com