ஏற்காட்டில் ரூ.30 லட்சத்துக்கு 13 கடைகள் ஏலம்

ஏற்காட்டில் ரூ.30 லட்சத்துக்கு 13 கடைகள் ஏலம் நடந்தது.
ஏற்காட்டில் ரூ.30 லட்சத்துக்கு 13 கடைகள் ஏலம்
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மாவட்ட ஊராட்சி குழுவுக்கு சொந்தமாக, 13 கடைகள் உள்ளன.

அந்த கடைகள் ஏலம், சேலம் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர், மக்கள் பங்கேற்றனர். டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஏலத்தை மாவட்ட ஊராட்சி குழு செயலர் சேகர் நடத்தினர். தி.மு.க. தரப்பில் 5 கடைகளும், அ.தி.மு.க. தரப்பில் 5 கடைகளும், பா.ம.க. தரப்பில் 3 கடைகளும் என முன்கூட்டியே சுமூகமாக பேசி வைத்திருந்தனர்.

இந்த மொத்தம் 13 கடைகள் ரூ.30 லட்சத்து, 99 ஆயிரத்து, 950-க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com