search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி   தட்டாஞ்சாவடி காளியம்மன்  கோவிலில்  1008 பால்குட ஊர்வலம்
    X

    பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் செடல் உற்வசத்தை முன்னிட்டு இன்று 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.

    பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம்

    • 7 மணிக்கு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.
    • படைவீட்டம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி காளி கோவிலை அடைந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் 63- ம் ஆண்டு செடல் மற்றும் சாகை வார்த்தல் பிரம்மோற்சவ விழா கடந்த 31 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் மாலை அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலம் லிங்கா ரெட்டி பாளையம் படைவீட்டம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி காளி கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. வருகிற 8-ந் தேதி செடல் உற்சவம் மற்றும் திருத்தேர் உற்சவம் நடக்கிறது. 9 -ந் தேதி மஞ்சள் நீர் விழாவும், 15 -ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

    Next Story
    ×