search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்:   - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்: - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

    • மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைக்க திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வு செய்யப்பட்ட 5 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தருமபுரி,

    வேளாண்மை பொறியியல் துறை மூலமாக ஆதி திராவிட (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள் அமைத்து சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட்டு, மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைக்க திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை உள்வட்டத்தில் சிட்டிலிங், வேடகட்டமடுவு, செல்லம்பட்டி பகுதிகளிலும் சுஞ்சல்நத்தம் உள் வட்டத்தில் தொண்ணகுட்ட அள்ளி, நாகமரை பகுதிகளிலும் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-2022 (கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட ஊராட்சிகள்) ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 5 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    எனவே, இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மானாவாரி விவசாயிகள் குறைந்தது (1 முதல் 5 ஏக்கர் வரை) உரிய வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று பெறப்பட வேண்டும்.

    சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட் (அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை) அமைத்திட வேண்டும்.

    பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள தொன்னகுட்டஹள்ளி, நாகமரை, வேடகட்டமடுவு, செல்லம்பட்டி மற்றும் சிட்லிங்கில் உள்ள SC/ST பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    இத்திட்டம் "பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம்"- ஒவ்வொரு வயலுக்கும் நீர் நிலத்தடி நீர்ப் பாசனத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

    அரசினால் நிர்ணயிக்கப்பட்ட(100m) ஆழத்திற்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ, 10hpக்கு கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவினை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட செயற்பொறியாளர் (வே.பொ), போன்- 04342296948, வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம், உதவிசெயற்பொறியாளர் போன்- 04342 296132, மாவட்ட ஆட்சியர் வளாகம் தருமபுரி, உதவிசெயற ்பொறியாளர்(வே.பொ), போன்- 04346296077, வேளாண்மை பொறியியல் துறை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு அரூர், மேல்கண்ட அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×