100 நாள் வேலை திட்டத்தை நகர பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டும்- கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

குலசேகரன்பட்டினத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மற்றும் பேரணி நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நேரு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், கிசான் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்பு குழு தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.மாநில துணைத் தலைவர் பூங்கோதை தொடக்க உரையாற்றினார்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள், ஊதியம் குறித்து கலந்துரையாடல் நடந்தது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை நகர பகுதி மக்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். 60 வயதை கடந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக விவசாய தொழிலாளர்களின் பேரணி நடந்தது.மாநில துணைசெயலாளர் மனைவிளை பாசி நிறைவு உரையாற்றினார்.வரவேற்புக்குழு செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com