முக்கூடல் அருகே வீட்டில் புகுந்த 10 அடி நீள நல்ல பாம்பு

அரியநாயகிபுரத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது. பிடிபட்ட நல்ல பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்தது.
பிடிபட்ட நல்ல பாம்பு.
பிடிபட்ட நல்ல பாம்பு.
Published on

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது. பாம்பு கிடப்பதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் பாம்பை பிடிப்பதற்காக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் வனத்துறையை சேர்ந்த உச்சிமாகாளி விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்தார். அது சுமார் 10 அடி நீளம் உள்ளதாக இருந்தது. பாம்பு வீட்டுக்குள் வந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com