search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவடியில் திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி- வாலிபர் மீது போலீசில் புகார்
    X

    ஆவடியில் திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி- வாலிபர் மீது போலீசில் புகார்

    • சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரை திருமணதகவல் மைய இணையதளம் மூலம் ஆவடி, கலைஞர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தொடர்பு கொண்டார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் நெருங்கி பழகினார். அப்போது இளம் பெண்ணிடம் உடல்நலக் குறைவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ரூ.1½ லட்சம் பெற்றதாக தெரிகிறது. பின்னர் சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் இதுகுறித்து அம்பத்தூரில் உள்ள ஆவடிமாநகர போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் சுந்தர மூர்த்தி திருமணம் செய்வ தாக ஏமாற்றி பல பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×