ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
Published on

இந்த இசை ஆல்பத்தை டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிராக இத்தனை அடக்குமுறைகள் ஏன்? எமர்ஜென்சி காலத்தை விட இப்போது தான் தமிழகத்தில் அதிகமாக குண்டர் சட்டம் ஏவி விடப்படுகிறது, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தமிழக அரசின் நடவடிகைகளுக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அது அறவழியில் வித்தியாசமான போராட்டமாக இருக்கும். தமிழக அரசால் அந்த போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாது.

பின்னர் பாரதிராஜாவிடம் சீமான் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பேசிய வேல்முருகனும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற தடியடிக்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தியும் அரசு செவி சாய்க்காததால் இன்று தீவிரமாக குரல் எழுப்பி உள்ளனர். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த பாடலை அந்தோனி தாசன் பாடி உள்ளார். பிரவீன் இசை அமைத்துள்ளார். மதன் இயக்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com