ராணுவத்தினருடன் ரோந்து பணிக்கு செல்கிறார் டோனி

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் டோனி,வரும் 31ம் தேதி முதல் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களுடன் எம்எஸ் டோனி
ராணுவ வீரர்களுடன் எம்எஸ் டோனி
Published on

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன.

இதையடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com