தேவாலயத்தில் திருமணம் நடத்த முயற்சி- பாதிரியார் உள்பட 3 பேர் மீது வழக்கு

ஈரோடு தேவாலயத்தில் வைத்து திருமணம் நடத்தி வைக்க முயன்ற பாதிரியார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
வழக்கு
வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் திருமணம் செய்வதற்காக ஈரோட்டை சேர்ந்த மணமகன், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணமகள் குடும்பத்தினர் 3 காரில் வந்தனர். 

தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் தேவாலயத்துக்குள் சென்று திருமணம் செய்ய அனுமதி இல்லை என கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் இரு வீட்டாரையும் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அரசு உத்தரவை மீறி தேவாலயத்தில் திருமணத்திற்கு அனுமதி அளித்த பாதிரியார் மற்றும் மணமகன், மணமகள் பெற்றோர் இருவர் மீதும் நோய் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com