சீனாவில் 11 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை

சீனாவில் சிறுமிகள் உட்பட 11 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவில் 11 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை
Published on

பீஜிங்:

சீனாவைச் சேர்ந்த கியா செங்யாங் என்ற நபர் 2016-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கியா 1988 ஆம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை கான்சு மாகாணம் மற்றும் மங்கோலியாவின் எல்லையோரப்பகுதியில் பல கொலை மற்றும் கொள்ளை குற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக சிறுமிகள் உட்பட 11 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று கியா செங்யாங்கிற்கு மரண தண்டனை விதித்து சீன நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  #china #murdercase

X

Maalai Malar
www.maalaimalar.com