கங்கையை சுத்தப்படுத்த ரூ.1,500 கோடி கிடைத்துள்ளது - மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல்

கங்கையை சுத்தப்படுத்த லண்டனில் உள்ள நிறுவனங்கள், வர்த்தகர்கள் ரூ.1,000 கோடியும், இந்திய நிறுவனங்கள் மூலம் ரூ.500 கோடியும் கிடைத்துள்ளதாக மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறியுள்ளார்.
Published on

மும்பை:

மத்திய அரசின் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை ஊக்கப்படுத்துவதற்காக மும்பை நகரில் தொழில் அதிபர்கள் கூட்டத்தை கூட்டி, மத்திய மந்திரி நிதின்கட்காரி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, “கடந்த வாரம் லண்டனில் கங்கை நதியை புதுப்பிக்கும் திட்டத்தை ஊக்குவிக்க ஊர்வலம் சென்றேன். இதன்மூலம் லண்டனில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், வர்த்தகர்கள் ரூ.1,000 கோடி நிதி அளித்துள்ளனர். இதுதவிர இந்திய நிறுவனங்கள் மூலம் ரூ.500 கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com