

சபரிமலை பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டசபையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம் நகரில் நேற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட சென்ற பா.ஜ.க.வினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.