கொல்கத்தா டெஸ்ட் - வங்காளதேசம் விக்கெட்டுகளை இழந்து திணறல்

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வங்காளதேசம் அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
3 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ்
3 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ்
Published on

கொல்கத்தா:

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷத்மாம் இஸ்லாம், இம்ருல் கயேஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இஸ்லாம் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர்.

இதையடுத்து, வங்காளதேசம் அணி உணவு இடைவேளை வரை 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், மொகமது ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com