5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் - மத்திய மந்திரி தகவல்

மத்திய அரசின் பயன்பாட்டில் உள்ள 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
Published on

மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “மத்திய அரசு மற்றும் அதன் அலுவலகங்களில் தற்போது உள்ள 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் படிப்படியாக மின்சார கார்களாக மாற்றப்படும்.

இதன் மூலம் ஆண்டுக்கு 83.20 கோடி லிட்டர் எரிபொருள் மிச்சமாகும். அந்த கார்கள் வெளியிடும் 22.3 கோடி டன் கார்பன்டை ஆக்சைடும் தவிர்க்கப்படும்” என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com