நைஜீரியாவில் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 5 பேர் மீட்பு- மத்திய மந்திரி தகவல்

நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 5 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
எம்டி அபகஸ் கப்பல்
எம்டி அபகஸ் கப்பல்
Published on

நைஜீரியாவின் போனி தீவு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ‘எம்டி அபகஸ்’ என்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். அதில் இருந்த 5 இந்திய மாலுமிகளை கரைக்கு அழைத்துச் சென்று சிறைவைத்தனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய கப்பல் துறை அமைச்சகம் இறங்கியது.

நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி காரணமாக, 5 மாலுமிகளும் கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com