

பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் 10-ந்தேதி முதல் நாளை வரை இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பஸ் நிலையம், கே.கே. நகர், மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் சானிட்டோரியம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு பயணிகள் செல்வதற்காக 310 மாநகர இணைப்பு பஸ்கள் 24மணி நேரமும் இயக்கப்படுகிறது.
10-ந்தேதி முதல் இன்று காலை வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் சேர்த்து இயக்கப்பட்ட 8,984 பஸ்களில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 292 பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி வழக்கமாக செல்லும் பஸ்கள் 450-ம், 82 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.