பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குடும்ப வன்முறை வழக்குகள்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் வகையில் 807 தங்குமிடங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குடும்ப வன்முறை
குடும்ப வன்முறை
Published on

பெண்களுக்கு எதிராக குடும்பத்தினரால் இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்கு கொண்டு வரப்பட்ட பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 65,481 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் குடும்ப வன்முறை வழக்குகள் பதிவான மாநிலமாக டெல்லி விளங்குகிறது. அங்கு 65,481 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தகவல் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கையை மேற்கோள்காட்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக 38,381 வழக்குகளுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், 37,876 வழக்குகளுடன் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கேரளா (20,826), மத்தியப் பிரதேசம் (16,384), மகாராஷ்டிரா (16,168), அசாம் (12,739), கர்நாடகா (11,407), மேற்கு வங்காளம் (9,858), ஹரியானா (7,715) போன்ற மாநிலங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை கையாள்வதற்கு 6 ஆயிரத்து 289 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் வகையில் 807 தங்குமிடங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற மையங்கள் போதுமான எண்ணிக்கையில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அடிப்படை கட்டமைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com