search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சேலை அணிந்து இருசக்கர வாகனத்தில் உலகை சுற்றி வரும் இந்திய பெண்
    X

    சேலை அணிந்து இருசக்கர வாகனத்தில் உலகை சுற்றி வரும் இந்திய பெண்

    • கடந்த ஆண்டு இந்த இருசக்கர வாகன பயணத்தை தொடங்கினார்.
    • ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் 23 ஆயிரம் கிலோ மீட்டர் சென்றுள்ளேன்.

    இந்தியாவின் புனே நகரை சேர்ந்தவர் ரமாபாய் லத்படே (வயது 28). இவர் தனது பள்ளிக்கூட படிப்பை முடிந்ததும் தனது பெற்றோர்களின் ஆதரவுடன் துணி மற்றும் ஆடம்பர நகைக்கடையை தொடங்கினார். எனினும் தனது விருப்பமான கமர்ஷியல் பைலட் படிப்பை 24-ம் வயதில் நிறைவு செய்தார். உலகை இருசக்கர வாகனத்தின் மூலம் இந்தியாவின் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வலம் வர வேண்டும் என ஆர்வம் கொண்டார். இந்த விருப்பத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் வாழ்த்தி கடந்த ஆண்டு இந்த இருசக்கர வாகன பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து ரமாபாய் லத்படே கூறியதாவது:-

    கடந்த ஆண்டு மார்ச் 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று ஹோண்டா 350 சிசி என்ற இருசக்கர வாகனத்தின் மூலம் உலகை சுற்றி வரும் பயணத்தை மும்பையின் கேட் ஆப் இந்தியாவில் இருந்து தொடங்கினேன். இதன் மூலம் உலகின் 6 கண்டங்களைச் சேர்ந்த 40 நாடுகளில் 80 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

    இந்த பயணத்தின் மூலம் இந்தியா, நேபாளம், பூடான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். மியான்மார் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக தனது இருசக்கர வாகனத்தை விமானம் மூலம் பாங்காக் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ௨௩ ஆயிரம் கிலோ மீட்டர் சென்றுள்ளேன்.

    ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற போது இந்தியர்கள் உள்ளிட்ட பலர் பாரம்பரிய முறைப்படி எனக்கு வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் போது அச்சுறுத்தல் எதுவும் இல்லை. உலகை சுற்றி வரும் நான் துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன். அவர்கள் எனது பயணம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இந்த பயணத்தின் மூலம் புடவை அணிவது இந்தியாவின் பாரம்பரியம் என்பதை வெளிப்படுத்துவதுடன், இருசக்கர வாகனத்தில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பயன்படுத்துவர் என்ற நிலையை மாற்றும் வகையில் அமைத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×