Bio Gas | எரிவாயு பற்றாக்குறையால் கவனம் பெறும் பயோ கியாஸ்

உணவுக் கழிவுகளில் இருந்து இதே முறையில் உயிரி வாயுவை உருவாக்க முடியும். பொதுவாக, உணவுக்கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க எளிய ஒரு அமைப்பு போதுமானது.
Bio Gas | எரிவாயு பற்றாக்குறையால் கவனம் பெறும் பயோ கியாஸ்
Published on

வளைகுடா நாடுகளில் போர் நாளுக்கு நாள் தீவிரமைடந்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கிவிட்டது. தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அதிகளவில் பயன்படுத்தும் எரிவாயுக்கு மாற்றாக பயோ கியாஸ் பயன்படுத்த முடியும்.

உலகின் பல பகுதிகளிலும் இயற்கை கழிவுகளில் இருந்து எரிவாயுவை இலவசமாக உற்பத்தி செய்து கொள்ள உதவும் "ஹோம் பயோ கியாஸ்" அமைப்பை உருவாக்கி வருகின்றனர்.

இந்த ஹோம் பயோ கியாஸ் என்பது, வீடுகளில் மீதமாகும் இயற்கை மற்றும் உணவுக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயுவை உருவாக்குவது ஆகும். இது 'காற்றில்லா செரிமானம்' என்ற செயல்முறையில் கரிமக்கழிவுகளாக உள்ள தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மக்க வைத்து அவற்றில் உள்ள பாக்டீரியாக்களை உடைத்து நொதிப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

இதே போல, உணவுக் கழிவுகளில் இருந்து இதே முறையில் உயிரி வாயுவை உருவாக்க முடியும். பொதுவாக, உணவுக்கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க எளிய ஒரு அமைப்பு போதுமானது. இதன் முக்கிய பகுதி `பயோ டைஜஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது. காற்றில்லாத ஒரு கலனில் உணவுக்கழிவுகளை வைக்கும் போது மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் எரிவாயுவாகிறது.

காய்கறி தோல் உள்பட சமையலறை கழிவுகள் அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் கலந்து போட்டால் 7 முதல் 10 நாட்களில் மக்கி மீத்தேன் வாயு வெளியாகும். இந்த வாயுவை குழாய் மூலம் அடுப்புக்கு இணைத்து, எரிவாயுவாக்கி சமைக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com