பளபளப்பான சருமத்திற்கு பன்னீர்

கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு, முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு பன்னீர் அருமருந்து.
பளபளப்பான சருமத்திற்கு பன்னீர்
பளபளப்பான சருமத்திற்கு பன்னீர்
Published on

சருமத்தை மட்டுமல்லாமல் எந்த ஒரு பொருளையும் மிருதுவாகவும், மென்மையாகவும். வைத்துக்கொள்ளும் தன்மை பன்னீருக்கு உண்டு. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றப்பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தக்கூடியவை. இதனால் சோர்வான தசைகள் புத்துணர்வு பெறுவதோடு புதுப்பொலிவையும் பெறும்.

உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க, பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்க. இவ்வாறு செய்தால் உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து அழகுக்கு அழகு சேர்க்கும்.

பன்னீருடன் வெந்தய விழுதையும் கிளிசரினையும் சேர்த்து கலந்து முடியின் வேர் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பொலிவாகும்.

பன்னீருடன் சந்தனப்பொடி, தேன் சோர்த்து குழைத்து உடலில் குறிப்பாக முகத்தில் தடவினால் சரும சுருக்கங்கள் நீங்கி, இளவை உங்கள் உடலில் இளைப்பாறுவதை உணரலாம்.

சாதாரண பன்னீர் ரோஜா இதழ்களை வைத்து வீட்டிலேயே சுத்தமான பன்னீரை எளிமையாக தயாரிக்கலாம். இதோ செய்முறை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com