search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட – தக்காளி
    X

    முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட – தக்காளி

    • தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது.
    • தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.

    தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.

    தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.

    பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

    அதேபோல் தங்காளி ஜூஸ் 3 ஸ்பூன், உருளைகிழங்கு ஜூஸ் 2 ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

    Next Story
    ×