

கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு நசுக்கியது - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
லெமன் சாறு அல்லது புளிச்சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
* கருணைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். பின்னர் நீரை வடித்து விடவும். இப்படி வேக வைத்து எடுத்தால் சாப்பிடும் போது நாக்கில் அரிப்பு இருக்காது.
* ஒரு தட்டில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பூண்டு, உப்பு, சிறிது, லெமன் அல்லது புளிச்சாறு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.
* பிரைந்த மசாலாவில் வேக வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற விடவும்.
* தோசைக்கல்லை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இந்த கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கவும்.
* ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.