சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பது குறித்து சேலம் கோபி மருத்துவமனை டாக்டர்கள் ஜோன்ஸ் ரொனால்ட், ஹரி ஜானகிராமன் ஆகியோர் கூறியதாவது:-
சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Published on

அப்படி ஒரு நிலை ஏற்படும் போது உயிர் வாழ டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சிறுநீரக நோயை கண்டுபிடிப்பதன் மூலம் மோசமான நிலையை அடையாமலும், இதன்மூலம் இதய நோய் வராமலும் தடுக்க முடியும்.அதாவது சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக எடை உள்ளவர்கள், 50 வயதுக்கு அதிகமானவர்கள், புகைபிடிப்பவர்கள், குடும்பத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து கொண்டால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிறுநீரக செயலிழப்பின் வேகத்தை குறைக்கவும், அதன் மூலமாக இதய பாதிப்புகளை தடுக்கவும் கீழ்கண்ட சிகிச்சை முறைகள் உதவுகின்றன. அதாவது ஆரோக்கியமாக உடலை பேண வேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறுநீரில் புரதசத்து ஒழுகுதலை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டும். கொழுப்பு சத்தின் அளவை ரத்தத்தில் குறைக்க வேண்டும். சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேற்கண்டவற்றை கவனித்து சிறுநீரக பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com