search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    தோசை, சப்பாத்திக்கு சூப்பரான பட்டாணி குருமா
    X

    தோசை, சப்பாத்திக்கு சூப்பரான பட்டாணி குருமா

    • பச்சை பட்டாணி குருமா ரொம்பவே ஈஸியான ரெசிபி
    • இந்த ரெசிபியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 1 கப்

    வெங்காயம் - 3

    தக்காளி - 4

    பச்சைமிளகாய் - 4

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்

    கொத்தமல்லி - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தேங்காய் பால் முதல் பால் - 1 கப்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பச்சைப்பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.

    2 தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்ததாக வெட்டி நறுக்கி வைத்துள்ள 2 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் முன்பு அரைத்து வைத்த தக்காளி சேர்க்கவும்.

    தொடர்ந்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    பிறகு வேகவைத்த பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு கீழே இறக்கவும்.

    இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான பச்சை பட்டாணி குருமா தயார்.

    Next Story
    ×