search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பப்பு
    X

    ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பப்பு

    • வயிற்றுப்புண்ணிற்கு மிகவும் நல்லது.
    • புளிச்ச கீரை உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

    காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. புளிச்ச கீரையை குழம்பு, கூட்டு, துவையல் போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கிறது. அடிக்கடிக்கு புளிச்சக்கீரை பருப்பு செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் வல்லமை புளிச்சக்கீரைக்கு உண்டு.

    தேவையான பொருட்கள்

    புளிச்ச கீரை- ஒரு கட்டு

    துவரம் பருப்பு- கால் கப்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 5

    பச்சை மிளகாய்- 5

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    பூண்டு- 10 (நறுக்கியது)

    தக்காளி- 1 (நறுக்கியது)

    புளி- சிறிதளவு

    பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    கொத்தமல்லி தழை- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குக்கரில் துவரம்பருப்பு, புளிச்ச கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து கலந்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் ஏற்கனவே வேகவைத்து எடுத்துள்ள புளிச்ச கீரை பருப்பு கடையலை இதில் சேர்க்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா பப்பு தயார்.

    இதனை சூடான சாதத்தில் நெய்விட்டு இந்த கோங்குரா பப்புவை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றுவதற்கு மிகவும் நல்லது.

    Next Story
    ×