

* சோயா மில்கையும், சோயா பொருட்களையும் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கான அடுத்த நிலையாகும். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சோயா பொருட்களை பயன்படுத்துவது அதன் அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க பயன்படும். ஐசோபவோன்கள் என்னும் சோயாபொருட்களில் உள்ள மூலப்பொருளானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், செல்கள் பரவுவதையும் தடுக்கிறது. கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க சோயாபொருட்கள் பயன்படும்.
* பொதுவாக புற்றுநோய்கள் உங்கள் குடல், புரோஸ்ட்ரேட், மற்றும் அனைத்து உடலுறுப்புகளையும் பாதிக்கக்கூடும். கர்ப்பபை புற்றுநோயால் ஏற்படும் முக்கியமான கோளாறுகள் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகும். இந்த இரண்டு நிலைகளுமே மிகவும் ஆபத்தனதாகும், இதனை சரிசெய்ய அதிக நீர் குடிக்க வேண்டியது அவசியம். அதிக நீர் குடிப்பது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும்.
* இஞ்சி பழங்காலம் முதலே பல இயற்கை வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. பல மோசமான நோய்களுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக செயல்படக்கூடும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஷோகள் போன்ற பொருட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. இஞ்சி நீண்ட காலமாக புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்களை சாப்பிடுவது ஒமேகா 3 அமிலங்களை பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஒமேகா 3 அமிலம் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த ஒமேகா -3 அமிலம் அதிலுள்ள ஆண்டி-ஆன்ஜியோஜெனிக் பண்புகளால் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது. இதன் மூலம் ஒமேகா 3 அமிலம் புற்றுநோய் செல்களுக்கு கிடைக்கும் இரத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.
* கிரீன் டீயில் அதிகளவு ஆன்டிஆக்சிடண்ட்கள் உள்ளது, இதிலுள்ள கேட்டச்சினின் மற்றும் எபிகேட்டச்சின்கள் இதனை புற்றுநோயை தடுக்கவும், அதற்கு எதிராக செயல்படவும் சிறந்த பொருளாக மாற்றியுள்ளது. கேட்டச்சினின் புற்றுநோய் செல்கள் உங்கள் உடலில் பரவுவதை தடுக்கும், எனவே உங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் இதனை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.