பெண்களே மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி?

காரணம் ஏதும் இல்லாவிட்டாலும், மனம் எப்போதும் கவலையிலேயே மூழ்கியிருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால், நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
பெண்களே மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி?
பெண்களே மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி?
Published on

காரணம் ஏதும் இல்லாவிட்டாலும், மனம் எப்போதும் கவலையிலேயே மூழ்கியிருக்கும்.

முன்பு விரும்பிச் செய்த செயல்களில்கூட தற்போது ஈடுபாடு இல்லாமல் போவது.

அளவிட முடியாத சோர்வு. எப்போதும் தூங்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது.

வழக்கத்தைவிட வெகு சீக்கிரம் தூக்கத்தில் இருந்து விழித்துவிடுவது.

தூக்கமில்லாமல் அவதிப்படுவது.

பசியின்மை, பிடித்தமான உணவுகளைக்கூட வேண்டாம் என்று புறக்கணிப்பது.

அளவிட முடியாத துக்கத்தில் சிக்கித் தவிப்பது.

பெரும் இழப்புகளால் திடீரென்று பாதிக்கப்படுவது.

சிந்தனை, செயல், ஈடுபாடு போன்ற அனைத்தும் மெல்ல மெல்ல குறைவது.

அலட்சியம், அஜாக்கிரதை உணர்வு அதிகரித்து, எதிலும் கவனமின்றி காணப்படுவது.

எதிர்காலத்தை பற்றிய பயம். தன்னை பலரும் புறக்கணிக்கிறார்கள் என்ற கவலை. தன்னால் இந்த நிலையில் இருந்து மீண்டுவர முடியாது என்ற அவ நம்பிக்கை உருவாகுவது.

அளவிட முடியாத தாழ்வு மனப்பான்மை.

தன்னை மதிக்காதவர்கள் மீது அதீத கோபம். அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற சிந்தனை உருவாகுதல்.

மேற்கண்டவைகளில் பாதிக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com