search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?
    X

    டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?

    • டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை.
    • கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.

    குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

    ஏடீஸ் (Aedis) கொசுக் களால் பரப்பப் படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.

    டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை

    டெங்கு காய்ச்சலின் அறி குறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

    அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோல் சிவப்பு ஆகுதல் (Skin Rash) சில கடுமையான சந்தர்ப்பங்களில் டெங்கு காய்ச்சல் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலுக்கு வழிவகுக்கும், இது இரத்தப்போக்கு, குறைந்த அளவிலான இரத்த தட்டுக்கள் மற்றும் அபாயகரமான அதிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தே கிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவது அவசியம்.

    டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?

    டெங்கு காய்ச்சல் பாதிப் புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?

    ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.

    டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முறையை பற்றி கூறுக?

    டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதே வைரஸ் பரவாமல் தடுக்க ஒரே வழி

    டெங்கு காய்ச்சலைத் தடுக்க சில வழிகள்:

    கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்றவும், ஏடிஸ் கொசு தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது. எனவே பூந்தொட்டிகள் , வாளிகள், தூக்கி எரியக்கூடிய டயர்கள் உட்பட உங்கள் வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது அவசியம். கொசு விரட்டியை பயன்படுத்துங்கள். கொசுக்கள் வராமல் இருக்க தோல் மற்றும் ஆடைகளில் கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள். கொசுக் கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீண்ட கை சட்டை மற்றும் பேன்ட்களை அணியுங்கள்.

    கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க திரைகளைப் பயன்படுத்தவும். மேலும் கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்போது விடியற்காலை மற்றும் அந்தி வேளையில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைக்கவும். டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக் சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக்குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட்டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.

    மழைக்காலங்களில் கொசு தொல்லையுடன் டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் உள்ளது. டெங்கு காய்ச்சல அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.

    டெங்குவினால் மூளைக்காச்சல் வருமா?

    மிகவும் அரிதாக வரலாம். ஒருசில நேரங்களில் டெங்கு வைரஸ் மூளை நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். அப்படி பாதிப்பிற்கு உள்ளானால் தலைவலி, வாந்தி, மயக்க நிலை மற்றும் வலிப்பு ஏற்படலாம். உடனடி தீர்வு சிகிச்சை செய்வது அவசியம்.

    குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவ மனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவ னந்தபுரம் சாலை, பாளை யங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783.

    Next Story
    ×