search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பச்சிளங்குழந்தையை தாய் அருகில் தூங்க வைக்கலாமா?
    X

    பச்சிளங்குழந்தையை தாய் அருகில் தூங்க வைக்கலாமா?

    • இளம் தம்பதியர் பிறந்த குழந்தையை தங்கள் அருகிலேயே தூங்க வைப்பதற்கு ஆசைப்படுகிறார்
    • குழந்தையை திருப்பி படுக்க வைப்பது அதன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    பிறந்த குழந்தைகள், பச்சிளங்குழந்தைகளை தனியாக தொட்டிலில் தூங்க வைப்பது வழக்கம். அது குழந்தைகளுக்கு சவுகரியமான சூழலை கொடுக்கும். எந்த அசவுகரியங்களுமின்றி குழந்தைகள் தூங்குவதற்கும் வழிவகுக்கும். இன்றைய காலகட்டத்தில் சில இளம் தம்பதியர் பிறந்த குழந்தையை தங்கள் அருகிலேயே தூங்க வைப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்.

    சிலர் குழந்தையை தங்கள் மார்பின் மீது குழந்தையின் தலைசாய்த்து தூங்க வைக்கிறார்கள். அப்படி குழந்தையை அரவணைத்தபடியே தூங்கவும் செய்கிறார்கள். மார்பில் குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பது குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையே உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அது பகல் வேளையில் குழந்தையை தூங்க வைப்பதற்குத்தான் பொருந்தும். தாங்களும் தூங்கிய நிலையில் குழந்தையை மார்பின் மீது படுக்க வைப்பது சரியான வழிமுறை அல்ல.

    அது குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். தூங்கிய நிலையில் தங்கள் சவுகரியங்களுக்கு ஏற்ப வலது பக்கம், இடது பக்கம் திரும்பி படுப்பார்கள். அதே நிலையில் குழந்தையையும் திருப்பி படுக்க வைப்பது அதன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில சமயங்களில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    சில தம்பதியர் தங்கள் இருவருக்கும் இடையே பச்சிளம் குழந்தையை தூங்க வைப்பார்கள். அதுவும் குழந்தைக்கு சவுகரியமான சூழலை கொடுக்காது. பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

    அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வின்படி, கடந்த 15 மாதங்களில் பாதுகாப்பற்ற முறையில் தூங்கிய சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரின் அருகில் தூங்கியவர்கள். அவர்களின் இறப்புகளுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

    குழந்தைகளை அருகில் தூங்க வைக்கும்போது ஆடைகளால் அதன் முகத்தை மறைப்பது, குழந்தைகளை நெருக்கமாக படுக்க வைக்கும்போது போதுமான அளவு சுவாசிக்க முடியாமல் சுவாசக்கோளாறு பிரச்சினையை எதிர்கொள்வது போன்றவை காரணமாக இருக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    குழந்தையை தனியாக தொட்டிலில் தூங்க வைப்பதுதான் சரியான வழிமுறை என்பதே மருத்துவர்களின் வாதமாக இருக்கிறது. குழந்தையுடன் நெருக்கமாக இருப்பதை உணரும் வகையில் தொட்டிலை அருகே அமைத்துக்கொள்ளலாம். அதன் மூலம் மூச்சுத்திணறல் உள்பட பிற அசவுகரியங்களில் இருந்து குழந்தையை காக்கலாம். குழந்தை ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிவகை செய்யலாம்.

    சில தம்பதியர் தங்கள் இருவருக்கும் இடையே பச்சிளம் குழந்தையை தூங்க வைப்பார்கள். அதுவும் குழந்தைக்கு சவுகரியமான சூழலை கொடுக்காது. பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

    Next Story
    ×