search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரதோஷம்... இன்று சொல்ல வேண்டிய நந்தி ஸ்லோகம்
    X

    பிரதோஷம்... இன்று சொல்ல வேண்டிய நந்தி ஸ்லோகம்

    • நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம்.
    • நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன.

    சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர்.

    நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.

    சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார்.

    நந்திகேசி மஹாயாக

    சிவதயா நபராயண கௌரீ

    சங்கரஸேவர்த்தம்

    அனுக்ராம் தாதுமாஹஸ

    என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.

    Next Story
    ×